ட்ரெண்டிங்

மூதாட்டி வீட்டில் தங்க நகைகள் திருட்டு!

சேலம் மாநகரம், பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள வாசக சாலை தெருவில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 71). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமான நிலையில், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பொன்னம்மாப்பேட்டையில் உள்ள வீட்டில் சரஸ்வதி தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், ஆகஸ்ட் 18- ஆம் தேதி வீட்டில் இருந்த பீரோவைத் திறந்துப் பார்த்த சரஸ்வதி அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 12.5 பவுன் தங்க நகைகள் காணவில்லை. இதைத் தொடர்ந்து, சரஸ்வதி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்பவம்  நிகழ்ந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மூதாட்டி பீரோவைப் பூட்டாமல் இருந்தது தெரிய வந்தது. பின்னர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.