ட்ரெண்டிங்

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வென்ற மாணவியர்கள் ஆட்சியருடன் சந்திப்பு!

 

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில்
ஜூலை 1- ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூலை 25- ஆம் தேதி வரை நடைபெற்று
வருகிறது. ஏற்கனவே, சேலம் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட வீரர் மற்றும்
வீராங்கனைகள் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கமும்,
அலங்கார வீச்சுப் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில், இப்போட்டியில் சேலம் மாவட்டம், கையுந்துப்பந்து விளையாட்டு
போட்டியில் பள்ளி பிரிவினைச் சார்ந்த மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
மாவட்ட அளவில் பள்ளி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் மாநில
அளவிலான போட்டியில் வெற்றி பெற்று ரொக்கப்பரிசாக ரூ.6,00,000/-
பெற்றுள்ளனர். இந்த கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற வி.அபிநயா,
வி.எஸ்.யாமினி, எம்.நிஷித்திரா, எஸ்.ரஞ்சினி, ஆர்.கனிஷ்கா, எஸ்.லாவண்யாஸ்ரீ,
கே.செல்வி, கே.மோனிகா, எஸ்.காயத்ரி, ஆர்ஜுவிகா, எஸ்.கிருத்திகா, எம்.மோனிகா
ஆகிய மாணவிகள் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


இந்நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சி.சிவரஞ்சன்,
மாவட்ட கையுந்துப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல், கையுந்துப்பந்து
சங்கத்தலைவர் ராஜ்குமார், சங்க தலைமை புறவளர் தமிழரசன் ஆகியோர்
உடனிருந்தனர்.