ட்ரெண்டிங்

ஆடுகளுக்கு தடுப்பூசிப் போட கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கால்நடைகளுக்கு ஏற்படும் ஆட்கொல்லி நோய்களைத் தடுக்கத் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரங்களில் ஆடு வளர்ப்பு அதிகளவில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் ஆடுகளை உயிர்க்கொல்லி நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

மேலும், ஆடு வளர்ப்பவர்கள் கடும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டுக்குட்டிகளுக்கு கட்டாயம் தடுப்பூசிப் போட வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.