ட்ரெண்டிங்

வாசன் கண் மருத்துவமனையில் லேசிக் மெஷின் திறப்பு!

 

சேலத்தில் முதல்முறையாக நமது வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய லேசிக் மெஷின் (ZEISS MEL-90) அறிமுகப்படுத்தப்பட்டது. திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சேலம் மாநகராட்சியின் மேயர் இராமச்சந்திரன், டாக்டர் எழில்வேந்தன் (Vinayaga Missions Health Care Dean) மற்றும் இரட்டை கிளி அரிசி ஆலையின் உரிமையாளர்

உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

 

வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் கமல்பாபு, சேலம் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வகுமாரி ஆகியோர் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது. 

 

மேலும் வாசன் கண் மருத்துவமனையின் மண்டல செயல் இயக்குநர், சுந்தரமுருகேசன், பானுபிரதாப் சிங், வெங்கடேஷ் (மண்டல மேலாளர்), பன்னீர்செல்வம் (மூத்த பொது மேலாளர்) தமிழ்செல்வன் (கோவை மண்டல வணிக மேலாளர்) மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.