ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது!

 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை (டிச.08) குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சாரப் பராமரிப்பு பணிகள் டிசம்பர் 08- ஆம் தேதியன்று நடைபெறுவதால், மேட்டூர் தொட்டில் பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் செயல்படாது.

 

அதன்படி, மாநகராட்சிப் பகுதியில் நாளை (டிச.08) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. கேட்டுக் கொண்டுள்ளார்