ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் வழியாக மங்களூருவில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!

 

தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் வழியாக மங்களூருவில் இருந்து தாம்பரத்திற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் நவம்பர் 12, 19, 26 ஆகிய நாட்களில் மங்களூருவில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மங்களூருவில் இருந்து காலை 10.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 05.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

இந்த ரயில், காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.