ட்ரெண்டிங்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்-சேலம் மாநகர காவல்துறை அறிவிப்பு!

 

சேலம் மாநகரத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படையின் பணியிடங்களை நிரப்ப சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, இந்த பணியிடங்களுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இருபாலரும் 10- ஆம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். சமூக சேவையில் ஈடுபடுபவராக இருத்தல் வேண்டும், எவ்விதமான அரசியல் மற்றும் இதர சங்கங்களைச் சார்ந்திருத்தல் கூடாது, விண்ணப்பதாரர்கள் எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.

 

மேலும், இந்த பணிக்கு ஊதியம் இல்லை; மேற்கண்ட பணிக்கான விண்ணப்பங்களை சேலம், வின்சென்ட் ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள சேலம் மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இன்று (நவ.22) முதல் நவம்பர் 25- ஆம் தேதி வரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்து, வரும் நவம்பர் 28- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பத்தினை நேரிலோ (அல்லது) தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.