தீபாவளி பண்டிகை இன்று (நவ.12) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலையிலேயே எழுந்து மக்கள், இறைச்சிக் கடைகளுக்கு சென்று, ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை வாங்கி வந்து, குளித்துவிட்டு பட்டாசுகளை வெடித்து, அசைவ உணவுகளைச் சாப்பிட்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் பலகாரங்களைப் பகிர்ந்து தீபாவளியைக் கொண்டாடி னர்
புதுமணத் தம்பதிகள் தல தீபாவளியை பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.