கோவை-ப்ரௌனி வாராந்திர சிறப்பு ரயில் குறித்து சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில், நவம்பர் 01- ஆம் தேதி கோவை-ப்ரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (Coimbatore - Barauni Weekly Special Train) கோவையில் இருந்து நள்ளிரவு 12.30 புறப்பட வேண்டிய நிலையில், அதிகாலை 03.55 மணிக்கு புறப்படும். சுமார் 03.50 மணி நேரம் ரயில் தாமதமாகப் புறப்படும். இந்த ரயில், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். மறுமார்க்கத்தில் வரும் ரயில் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.