ட்ரெண்டிங்

விமானம் மூலம் கோவா ஆளுநர், நடிகை நமீதா சேலம் வருகை!

விமானம் மூலம் கோவா ஆளுநர், நடிகை நமீதா சேலம் வருகை!

 

சேலம்- சென்னை இடையே பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு கோவா ஆளுநர் உள்பட 43 பேர் சென்றனர்.

 

சேலத்தில் இருந்து சென்னைக்கு செயல்பாட்டில் இருந்த விமானப் போக்குவரத்து, கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரத்துச் செய்யப்பட்டது. மீண்டும் விமான சேவையைத் தொடங்க, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, கடந்த அக்டோபர் 16- ஆம் தேதி முதல் உதான் திட்டத்தின் கீழ் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பெங்களூரு- சேலம்- கொச்சி வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இருந்து சேலத்திற்கு நண்பகல் 12.30 மணிக்கு சென்றடைந்த விமானத்தில், கோவா மாநில ஆளுநர் சீனிவாச பிள்ளை, நடிகை நமீதா உள்பட 43 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12.50 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்னைக்கு சென்றனர்.