தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்டோபர் 27- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது,
"எதிர்வரும் நவம்பர் 12- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008- ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்டோபர் 27- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.