சேலம் மாநகராட்சியின் அஸ்தப்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 8-வது வார்டில் உள்ள மூக்கனேரியில் தூர்வாரும் பணியினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., மாநகர நல அலுவலர் யோகானந் ஆகியோர் இன்று (செப்.23) காலை 10.00 மணிக்கு நேரில் பார்வையிட்டு, ஆய்வுச் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 39- வது வார்டில் உள்ள பெரிய கிணறு தெருவில் கழிவுநீர் வடிகால் சிறு பாலத்தை உயரப்படுத்த வேண்டிய பணியினை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., மாநகர நல அலுவலர் யோகானந் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வுச் செய்தனர்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.