ட்ரெண்டிங்

ஜன.16- ஆம் தேதி சேலத்தில் இறைச்சி விற்பனை செய்யத் தடை!

 

வரும் ஜனவரி 16- ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16- ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி, அன்றைய தினம் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளுவர் தினமான வரும் ஜனவரி 16- ஆம் தேதி மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.

 

அரசின் உத்திரவிற்கிணங்க, சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை அடைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வாமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.