ட்ரெண்டிங்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், தூக்கணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது, முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட, முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சாலையில் நடந்துச் சென்றவர்கள், இந்த விபத்து குறித்து மேட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து சாலையில் நடந்துச் செல்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.