ட்ரெண்டிங்

சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை! 


தாதகாப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அ.தி.மு.க.வின் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளரும், முன்னாள் மண்டலக்குழு தலைவருமான சண்முகம், நேற்றிரவு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து உடலை எடுப்பதற்கு அனுமதிக்காமல் உறவினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அ.தி.மு.க.வினர் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.  

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி.களில் பதிவான காட்சிகளைக் கொண்டு சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.