ட்ரெண்டிங்

இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர் கைது!

இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர் கைது! 

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர், நேற்று (ஆகஸ்ட் 09) சுந்தர லாட்ஜ் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து இருசக்கர ஆவணங்கள் கேட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அதில், அந்த இளைஞர் பெயர் ராமர் (வயது 26) என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அத்துடன், அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடி வந்ததை காவல்துறையினரிடம், அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இளைஞர் ராமரை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, வேறு எங்கேயாவது கொள்ளையடித்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இருசக்கர வாகனத்தின் உரிமையாளரை அழைத்து, இருசக்கர வாகனத்தைத் திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.