பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச குவாஷ் போட்டியில் இந்திய வீரர் வேலவன் செந்தில் குமார், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பாரீஸில் நடைபெற்ற பேட் ஓபன் சேலஞ்சர் போட்டியில் பிரான்ஸ் வீரரை செந்தில் வேலவன் 11-9, 11- 6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்தவரான வேலவன் செந்தில் குமார், குவாஷ் உலக தரவரிசையில் 58- வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே 8 முறை சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.