ட்ரெண்டிங்

சேலம் வீரர் வேலவன் செந்தில் குமார் சாம்பியன்! 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச குவாஷ் போட்டியில் இந்திய வீரர் வேலவன் செந்தில் குமார், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

பாரீஸில் நடைபெற்ற பேட் ஓபன் சேலஞ்சர் போட்டியில் பிரான்ஸ் வீரரை செந்தில் வேலவன் 11-9, 11- 6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்தவரான வேலவன் செந்தில் குமார், குவாஷ் உலக தரவரிசையில் 58- வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் ஏற்கனவே 8 முறை சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.