ட்ரெண்டிங்

ஆடு திருடிய நபர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்! 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உமையாள்புரம் கிராமத்தில் ஆடு திருடிய 2 நபர்களை பிடித்த பொதுமக்கள் தர்ம் அடி கொடுத்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர், ஆடு திருடியவர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொத்தவாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலு மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. 

இதையடுத்து, அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வழக்குப்பதிவு செய்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், உமையாள்புரம் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.