ட்ரெண்டிங்

கேரளா, கர்நாடகா வியாபாரிகள் வராததால் விற்பனை சரிவு! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் கேரளா, கர்நாடகா வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்துள்ளது. 

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், அங்கிருந்து வழக்கமாக வரும் வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. இதனால் சந்தை களையிழந்து காணப்பட்டது. வழக்கமாக ரூபாய் 5 கோடிக்கு விற்பனை நடைபெறும் நிலையில், ரூபாய் 2 கோடிக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.