ட்ரெண்டிங்

ஓய்ந்தது தேர்தல் பரப்புரை! 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கும் நிலையில் பரப்புரை நிறைவுப் பெற்றது. 

21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 மக்களவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. பரப்புரை ஓய்ந்த நிலையில், அமைதியான பரப்புரை உட்பட எந்த வகையான வாக்குச்சேகரிப்புக்கும் அனுமதி இல்லை. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கட்டங்களாக தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். கடந்த மார்ச் 24- ஆம் தேதி திருச்சியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அவர், சேலத்தில் தனது பரப்புரையை நிறைவுச் செய்தார். 

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு 9 முறை வந்து பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.