ட்ரெண்டிங்

சேலத்தில் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு! 

மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் விக்னேஷ், இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ் குமார் என 25 பேர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக, சேலம் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. 

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம் தொகுதியில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  

குறிப்பாக, வாக்காளர்களை கவரும் வகையில் பரோட்டா போட்டுக் கொடுத்தும், டீ போட்டுக் கொடுத்தும் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.