ட்ரெண்டிங்

சேலத்தில் திடீர் மழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்! 

சேலத்தில் திடீரென கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சேலம் மாநகரில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது, இதனால் பொதுமக்கள், முதியவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடும் சிரமமடைந்தனர். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. 

இந்த சூழலில், இன்று (ஏப்ரல் 02) மாலை 04.00 மணிக்கு சேலம் மாநகர பகுதிகளான வின்சென்ட், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் சேலம் மாநகரில் ஐந்து மாதத்திற்கு பிறகு மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.