ட்ரெண்டிங்

திருப்பதிக்கு புதிய ரயில் சேவைகள் அறிவிப்பு! 

சேலம் வழியாக திருப்பதி- கொல்லம் இடையே புதிதாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி- கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்படும். வரும் மார்ச் 15- ஆம் தேதி முதல் திருப்பதியில் இருந்து கொல்லத்திற்கும், மார்ச் 16- ஆம் தேதி முதல் கொல்லத்தில் இருந்து திருப்பதிக்கும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படும். 

இந்த ரயில் சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.