ட்ரெண்டிங்

500 குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்! 

சேலம் மாவட்டம் வழியாக பெங்களூருவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 500 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அம்மாப்பேட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

அம்மாப்பேட்டையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் குஜராத் பதிவெண் எண்ணை கொண்ட ஸ்கார்ப்பியோ காரை அதிரடியாக சோதனை செய்தனர். 

காரில் பதுக்கி வைத்திருந்த அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.