ட்ரெண்டிங்

புதுச்சேரி சிறுமி கொலை- சேலத்தில் ஆர்ப்பாட்டம்! 

புதுச்சேரி சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட வலியுறுத்தி, சேலத்தில் மாணவ, மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2- ஆம் தேதி மாயமானார். அதனை தொடர்ந்து 2 தினங்களுக்கு பிறகு சிறுமி கால்வாயில் சாக்கு முட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, சேலம் கோட்டை மைதானத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவல்துறையைக் கண்டித்தும், புதுச்சேரி அரசைக்  கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.