ட்ரெண்டிங்

நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகை ஆசை- நடிகை பவ்ய த்ரிகா பேட்டி! 

சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகரில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் 19- வது ஆண்டு விழா இன்று (மார்ச் 08) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை பவ்ய த்ரிகா கலந்து கொண்டார். திரைப்படப் பாடல்களுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய பவ்ய த்ரிகா, அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை பவ்ய த்ரிகா, நான் நடித்த இடி மின்னல் காதல் திரைப்படம் வரும் மார்ச் 29- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். மேலும் பெண்கள் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்; பெண்களுக்கு பெண்களே உதவியாக இருக்க வேண்டும். வாழ்க்கையை ஈசியாக எடுத்து கொள்ள வேண்டும். 

எனது அப்பாதான் தனக்கு ரோல் மாடல், தன்னம்பிக்கை மற்றும் நடிப்பு மீதான ஆர்வம் அவரிடம் இருந்துதான் வந்தது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சினிமா துறையில் பெண்களின் பாதுகாப்பு முன்னேறி உள்ளது. நடிகர் விஜய் மற்றும் விஜய்தேவர்கொண்டா ஆகியோருடன் உடன் நடிக்க ஆசை உள்ளது எனத் தெரிவித்தார்.