ட்ரெண்டிங்

நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்!

சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு அருகே கால்நடைகளுக்கான மருந்துகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளன.

கொத்தாம்பாடி பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கால்நடைகளுக்கான மருந்துகள் கொட்டப்பட்டுள்ளன. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இந்த மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.