ட்ரெண்டிங்

கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கோவை- சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாளை (பிப்.04) இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.20 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், பிப்ரவரி 05- ஆம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 08.25 மணிக்கு கோவையைச் சென்றடையும். 

இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.