ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் பொங்கல் விழா..!


குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் தலைமை தாங்கினார். கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ. ஜி. பவானீஸ்வரி, சேலம் சரக டி. ஐ. ஜி. உமா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பின்னர் ஆண், பெண் போலீசாருக்கு தனித்தனியே கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் ஐ. ஜி. பவானீஸ்வரி பரிசு வழங்கினார். முன்னதாக ஐ. ஜி. பவானீஸ்வரி, சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் மாட்டு வண்டியில் அமர்ந்து ஆயுதப்படை மைதானத்தை சுற்றி வலம் வந்தனர்.