ட்ரெண்டிங்

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

 

சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் ஜனவரி 14- ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கும், ஜனவரி 16- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

இந்த சிறப்பு ரயில்கள்,நெல்லூர், குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.