ட்ரெண்டிங்

செகந்திராபாத்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

சேலம் வழியாகச் செல்லும் செகந்திராபாத்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 05- ஆம் தேதி அன்று மதியம் 01.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 07.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

மறுமார்க்கத்தில், ஜனவரி 06- ஆம் தேதி நள்ளிரவு 11.00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஜனவரி 08- ஆம் தேதி அன்று அதிகாலை 05.55 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள், குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

 

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.