ட்ரெண்டிங்

மங்களூரு- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு!

 

மங்களூரு- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களூரு- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், டிசம்பர் 03- ஆம் தேதி முதல் ஜனவரி 28- ஆம் தேதி வரை மங்களூரு- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், டிசம்பர் 01- ஆம் தேதி முதல் ஜனவரி 26- ஆம் தேதி வரை தாம்பரம்- மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

 

இந்த சிறப்பு ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில் சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.