ட்ரெண்டிங்

பேச மறுத்த காதலி... தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதியை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆனந்தசுரேஷ். 21 வயதான இந்த இளைஞர், சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அந்த பகுதியில், வீட்டை வாடகைக்கு எடுத்து தனது பெற்றோருடன் வசித்து வந்த ஆனந்தசுரேஷ், நேற்று (ஆகஸ்ட் 21) காலை 06.00 மணியளவில் அவரது அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் அவரது பெற்றோர் கதவைத் தட்டி திறக்காத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது, ஆனந்தசுரேஷ் மின்விசியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதைப் பார்த்து, அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இளைஞரின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில், பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெண்ணை ஆனந்தசுரேஷ் காதலித்து வந்ததும், அந்த பெண் ஆனந்தசுரேஷிடம் பேசுவதைத் திடீரென நிறுத்தியுள்ளார். இதனால் இளைஞர் ஆனந்தசுரேஷ் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. இருப்பினும், இளைஞர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.