ட்ரெண்டிங்

மேலிருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு!

மேலிருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு! 

சேலம் மாவட்டம், மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் பெயிண்டராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 15- ஆம் தேதி அம்மாப்பேட்டையில் உள்ள பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலையைச் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின், இரண்டாவது மாடிக்கு சென்ற ஹரிஹரன், வீட்டிற்கு வெளியே உள்ள கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தார். 

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்த ஹரிஹரன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட அவர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 16) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஹரிஹரன் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வேலை செய்தது தெரிய வந்தது.