ட்ரெண்டிங்

சேலத்தில் கனமழை- பொதுமக்கள் மகிழ்ச்சி! 

சேலம் மாநகர் முழுவதும் தொடர்ந்து 2-வது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

குறிப்பாக, சேலம் அயோத்தியாப்பட்டினம், அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், அண்ணா பூங்கா, 4 ரோடு, மத்திய பேருந்து நிலையம், 5 ரோடு, வின்சென்ட், ஏற்காடு அடிவாரம், அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, கோரிமேடு, ஜங்சன், சூரமங்கலம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. 

தொடர் கனமழை காரணமாக, தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மாநகரத்தில் உள்ள சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.