ட்ரெண்டிங்

சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்கள்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

எஸ்.கொல்லப்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் விஜய் மாரியப்பன் ஊர் மக்களுக்கு மாதச்சீட்டு, வாரச்சீட்டு உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து, அதன் மூலம் பணம் பெற்று வந்துள்ளனர். ஆறு மாதங்களாக அவர்கள் பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். 

இதனால் அவர்களிடம் சீட்டுப் போட்ட கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுத் தரக்கோரியும் ஓமலூர் காவல் நிலையத்தை 100- க்கும் மேற்பட்டோர் முற்றுமையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து ஓமலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.